தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2019, 3:44 PM IST

ETV Bharat / state

திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயிலின் பிரம்மோற்சவம் விழா

சென்னை: திருநின்றவூர் பக்தவச்சல பெருமாள் கோயிலின் 10ஆம் நாள் பிரம்மோற்சவம் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Thirunindravur temple

சென்னை ஆவடி அருகே திருநின்றவூரில் பக்தவச்சல பெருமாள்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 10ஆம் நாள் பிரம்மோற்சவம் விழா வெகு விமரிசையாக இன்று நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதில், சாமிக்கு சிறப்புஅலங்காரம் செய்யப்பட்டு பெருமாள் தங்க கருட வாகனத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மேலும், தங்க கருட வாகனத்தில் மேற்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு என நான்கு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனையொட்டி ஆங்காங்கே பஜனை பாடல்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வருகின்ற வெள்ளிக்கிழமை திருத்தேர் நடைபெற உள்ளது. இதில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்களும்கலந்துகொள்வர்.

ABOUT THE AUTHOR

...view details