தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 28, 2019, 8:31 PM IST

ETV Bharat / state

வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டும் - காவல் ஆணையர்

சென்னை: தெற்கு காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழாவில், வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்தார்.

பரிசளிப்பு விழாவில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்
பரிசளிப்பு விழாவில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

சென்னை சைதாப்பேட்டையில் தெற்கு காவல் சிறார் மன்றங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், 'வசதி வாய்ப்பு இல்லாத குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் அவர்கள் வாழ்க்கையில் சிறந்த முறையில் முன்னேறுவார்கள்' என்றார்.

பரிசளிப்பு விழாவில் பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன்

மேலும், ' சிறார் மன்றங்கள் சார்பில் மாணவர்களுக்கு பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் திறமையை அங்கீகரிக்க பல தொண்டு நிறுவனங்களோடு கைகோர்த்து செயல்பட்டு வருகின்றோம்' எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குற்றவாளிகளை குறிவைக்கும் சிசிடிவி: சென்னை காவல்துறையின் பலே ஐடியா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details