இது குறித்து அவர் கூறுகையில், ”பள்ளிகளில் காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, நாளை முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . அக்டோபர் 3ஆம் தேதி 8ஆம் வகுப்பு வரையிலான அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான சுமார் 2 கோடி விலையில்லா பாட புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பாடப்புத்தகங்கள் அனைத்தும் மாவட்டங்களுக்கும் தற்போதே சென்றுவிட்டன.
காலாண்டு விடுமுறைக்கு பிறகு 2ஆம் பருவத்திற்கான பாட புத்தகம் விநியோகம்
சென்னை: எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் அக்டோபர் 3ஆம் தேதி விநியோகிக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை
அதேபோன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கனவே முக்கிய பாடங்களில் ஒரு தொகுதி பாட புத்தகங்கள் மட்டுமே வழங்கப்பட்டன . தற்போது இரண்டாம் தொகுதி பாட புத்தகங்கள் தயாராகி விட்டதால் அந்தப் பாட புத்தகங்களும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. காலாண்டு விடுமுறைக்கு பிறகு அந்த பாட புத்தகங்களும் வழங்கப்படும்” என்றார்.