பெங்களூரு சிக்கபனாவராவில் ஜமாத் உல் முஜாஹிதீன் ஜே.எம்.பி (ஜமாஅத் உல் முஜாஹிதீன் பங்களாதேஷ்) அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பவர்கள், வாடகை வீட்டில் பதுங்கி இருப்பதாக பெங்களூரு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுங்கியிருந்த நஜீர் சேக் (25), ஆரிப் ஹுசைன் (24), ஆசிப் இக்பால் (23) உட்பட 11 நபர்களை தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஜே.எம்.பி உறுப்பினர்கள் என்று தெரியவந்தது.
அந்த வீட்டில் நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள், வெடி மருந்துகள், ரசாயன இயந்திரங்கள், கருவிகள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.