தமிழ்நாட்டில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 29) புதிதாக 6 ஆயிரத்து 426 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 34 ஆயிரத்து 114ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் மட்டும் ஆயிரத்து 117 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 97 ஆயிரத்து 575ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 741ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 927 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்த வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 883ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 57 ஆயிரத்து 490 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை:
சென்னை - 97,575 பேர்
செங்கல்பட்டு - 13,841 பேர்
திருவள்ளூர் - 13,184 பேர்
மதுரை - 10,618 பேர்
காஞ்சிபுரம் - 8,422 பேர்
விருதுநகர் - 7,256 பேர்
தூத்துக்குடி - 6,591 பேர்
திருவண்ணாமலை - 5,823 பேர்
வேலூர் - 5,492 பேர்
திருநெல்வேலி - 4,729 பேர்
தேனி - 4,468 பேர்
ராணிப்பேட்டை - 4,491 பேர்
கன்னியாகுமரி - 4,275 பேர்
கோயம்புத்தூர் - 4,344 பேர்
திருச்சிராப்பள்ளி - 3,889 பேர்
கள்ளக்குறிச்சி - 3,633 பேர்
விழுப்புரம் - 3,499 பேர்
சேலம் - 3,428 பேர்