தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாடு காவல்துறையில் துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றது யார் ?

மண்டலங்களுக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, சம அளவில் புள்ளிகள் பெற்ற தமிழ்நாடு காவல்துறை தலைமை மண்டல அணியும், மத்திய மண்டல அணியும் பங்கிட்டுக் கொண்டன.

By

Published : Jan 10, 2022, 12:45 PM IST

Published : Jan 10, 2022, 12:45 PM IST

தமிழ்நாடு காவல்துறையில் துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றது யார்
தமிழ்நாடு காவல்துறையில் துப்பாக்கி சுடும் போட்டி: வெற்றி பெற்றது யார்

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கம் துப்பாக்கி சுடும் தளத்தில் தமிழ்நாடு காவல்துறை மண்டல அளவிலான வருடாந்திர துப்பாக்கி சுடும் போட்டி, ஜனவரி 8 ஆம் தேதி தேதி நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து காவல்துறை அலுவலர்கள், காவலர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

காவல்துறை துப்பாக்கி சுடும் போட்டி

மண்டலங்களுக்கு இடையே நடந்த போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை, சம அளவில் புள்ளிகள் பெற்ற தலைமை மண்டல அணியும், மத்திய மண்டல அணியும் பங்கிட்டுக் கொண்டன. இரண்டாவது இடத்தை தெற்கு மண்டல அணியும், மூன்றாவது இடத்தை ஆயுதப்படை அணியும் பெற்றன.

தமிழ்நாடு காவல்துறையில் துப்பாக்கி சுடும் போட்டி
இதில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இதையும் படிங்க: அதிகப் பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்திடுமா? பில்கேட்ஸை வம்புக்கு இழுத்த டிஜிபி சைலேந்திரபாபு...

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details