சென்னை:அம்பத்தூர் விஜயலட்சுமிபுரம் எம்சி ராஜா தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அதே பகுதியில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வரும் தில்லை நடராஜன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த சாலையை தனது நிலம் எனக்கூறி அங்கிருந்த மரங்களை அகற்றிவிட்டு வழியை அடைத்து சுவர் எழுப்பி உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பவே தில்லை நடராஜன் ஆள்களை வைத்து தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆள்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர். இதனால் சங்கீதா என்ற பெண்ணுக்கு இடது கை முறிவு ஏற்பட்டுள்ளது.