சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமி நாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் , சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, 'ஒவ்வொரு மாணவனும் ஒரு விஞ்ஞானி' என்கின்ற திட்டத்தின் கீழ், மாநகராட்சிப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை அழைத்து பருவநிலை மாற்றம் தொடர்பாக அவர்களின் கருத்துக்களைக் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, பருவநிலை மாற்றம் தொடர்பாக உரையாற்றினர்.
மேலும் பருவநிலை மாற்றம் தொடர்பான கட்டுரைகளையும், அதை எதிர்கொள்வது தொடர்பாகச் செய்திருந்த மாதிரி படத்தையும் மாணவர்கள் சமர்ப்பித்தனர்.