தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 24, 2020, 7:08 PM IST

ETV Bharat / state

பாடகர் எஸ்பிபியின் உடல் நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

சென்னை: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்பிபியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

எஸ்பிபி
எஸ்பிபி

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கரோனா நோய்த்தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் நலமுடன் வீடு திரும்ப உலக இசை ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தற்போது எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்று வரும் எஸ்.பி.பி. தொடர்ந்து எக்மோ, செயற்கை சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் அவரது உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையும் படிங்க:ஆயிரம் நிலவே வா என்று வாழ்க்கைய தொடங்கியவர், ஆயிரம் பிறைகள் காணவேண்டும் - விவேக்

ABOUT THE AUTHOR

...view details