தமிழ்நாடு

tamil nadu

ரயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பலே ஆசாமிகள் கைது...

சென்னை: மின்சார ரயில்களில் பயணிகளின் கவனத்தை திசை திருப்பி நகை, செல்போன்களை திருடிய ஆறு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

By

Published : Aug 30, 2019, 2:10 AM IST

Published : Aug 30, 2019, 2:10 AM IST

கைது

சென்னை மின்சார ரயிலில், கடந்த 28ஆம் தேதி வசந்தா என்ற பெண், பயணம் செய்துள்ளார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரின் கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து அந்த பெண் சென்ட்ரல் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையடித்த கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், வியாழக்கிழமையன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த ஆறு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பலாசா ராய்(43), கவுதம் தாஸ்(42), சுமித் பட்டக்(21), சங்கரல் அகர்வால், கோபால் மோதி, ரதோஸ்யாம் ராய் சவுத்திரி ஆகியோர் கொள்ளையடிக்கும் கும்பல் என தெரியவந்தது. மேலும், இவர்கள் ஒன்று சேர்ந்து ரயில் பயணிகளின் கவனத்தை திருப்பி, நகைகள், செல்போனை பறித்து செல்வது வாடிக்கையாக மேற்கொண்டு வந்துள்ளனர்.

மின்சார ரயிலில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேர்

மேலும் இவர்கள் திருடிய நகைகள், செல்போன்களை சொந்த ஊரில் கொண்டு சென்று விற்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர் இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 4 சவரன் நகைகள், 5 செல்போன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பின்னர், ஆறு பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details