தமிழ்நாடு

tamil nadu

குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம்!

By

Published : Sep 30, 2020, 9:39 PM IST

சென்னை : குழந்தைகளின் உரிமை, பாதுகாப்பு, சவால்கள், முன்னுரிமைகள், பங்கேற்பு என்ற தலைப்பில், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி. பொன்னையன் தலைமையில் கருத்தரங்கு நடைபெற்றது.

குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு, சவால்கள், முன்னுரிமைகள், பங்கேற்பு என்ற தலைப்பில் இன்று மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் சார்பாக இணைய வழிக் கருத்தரங்கு, மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத்தலைவர் சி. பொன்னையன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சமூகப் பாதுகாப்புத் துறை, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, பள்ளிக் கல்வித் துறை, தொழிலாளர் நலன், மாநிலக் குற்ற ஆவணக் காப்பகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்துத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, போக்குவரத்துத் துறை அலுவலர்கள் மற்றும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பிற்கான மாநிலக் குழு, குழந்தைகள் நலனுக்கான இந்தியக்குழு, யுனிசெப் ஆகியவற்றின் பிரதிநிதிகள் மற்றும் துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கருத்தரங்கில் பேசிய மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் சி.பொன்னையன், "தமிழ்நாட்டின் கடைக்கோடியில் வாழும் குழந்தைகளையும் பயன்கள் சென்றடையும் வண்ணம் திட்டங்கள் வகுக்கப்பட்டு, குழந்தைகளின் உரிமைகள் மதிக்கப்பெறவும், பாதுகாக்கப்படுவதையும், மேம்பாடு அடையச் செய்வதையும் உறுதி செய்யும் வகையில் இக்கருத்தரங்கின் பரிந்துரைகள் அமைந்துள்ளன" என்று தெரிவித்தார்.

மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் இது குறித்து பேசுகையில், ”தற்காலச் சூழலுக்கேற்ப குழந்தைகளின், குறிப்பாக சமூகத்தின் விளிம்பு நிலையிலுள்ள பாலியல் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறைக்கைதிகள், ஆயுள் தண்டனைக் கைதிகள், பெண் குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பங்களிலுள்ள குழந்தைகள் ஆகியோர் பத்திரமாக இருப்பதையும் அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யத்தக்க உத்திகளையும், செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டியதன் தேவையையும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் இக்கருத்தரங்கில், சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள், பெண் குழந்தைகளின் பத்திரத்தன்மை, பாதுகாப்பு, குழந்தைகளைத் தத்தெடுத்தல் மீதான தற்போதைய நடைமுறைகள், குழந்தைகளைத் தவறாக நடத்துதலைத் தடுத்தல், சிறுமியரின் பாதுகாப்பு, காப்பகங்களில் உள்ள குழந்தைகளின் தேவைகள் மீதான கருத்துகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன.

இதையும் படிங்க: பிகார் தேர்தல் : சிறையிலிருந்தே வேட்பாளர் பட்டியலைத் தேர்வு செய்யும் லாலு

ABOUT THE AUTHOR

...view details