சென்னை: உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் நீதிபதிகளாக ஸ்ரீமதி சுந்தரம், டி.பரத சக்ரவர்த்தி, ஆர்.விஜயகுமார், முகமது சபிக் ஆகிய 4 பேரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்படி நான்கு பேரும் கடந்த 20-ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதியாக சத்தியநாராயண பிரசாத்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.