சென்னை:மனநோய் மற்றும் தூக்கத்துக்கு கொடுக்கப்படும் மருந்துகள், தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அறிய, மாநிலம் முழுவதும் உள்ள மருந்துக்கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முறைகேடாக விற்பனை செய்யப்படும் மருந்துகள் பறிமுதல் செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட மருந்துக்கடைகள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, சென்னை பெருங்குடி திருமலை நகர்ப் பகுதியில் உள்ள மருந்துக்கடையில், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வலி நிவாரணி மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த கடையில் அதிகாரிகள் சோதனை செய்த போது மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் வலி நிவாரணி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.