சென்னை: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.15 ஆயிரத்திலிருந்து, ரூ. 20 ஆயிரமாக உயர்த்தி உயர் கல்வித்துறைச் செயலாளர் கார்த்திகேயன் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், '2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 1, 661 கவுரவ விரிவுரையாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தலா ரூ. 15 ஆயிரம் வீதம், 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்பட்டது.