கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மீண்டும் சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிக்க தடைவிதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தின்போது சிறு வியாபாரிகள் பேசியதாவது, “சென்ற வருடம் கரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் சுற்றுலாத் தலங்களுக்குப் பயணிக்க விதிக்கப்பட்ட தடையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தற்போதுதான் சிறு வியாபாரிகள் மெள்ள மெள்ள மீண்டுவந்தனர். இந்நிலையில் மீண்டும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.