சென்னை: பொறியியல் படிப்பிற்கான சிறப்பு பிரிவு மற்றும் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் மாணவர்கள் கல்லூரிகளை தேர்ந்தெடுப்பது மற்றும் அவற்றை உறுதி செய்வதற்கான ஆன்லைன் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் 4 சுற்றுகளாக கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
நாளை 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. அதன்படி 21ம் தேதி முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் விளையாட்டு பிரிவினர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 21 முதல் 24ந் தேதி வரை நடைபெறுகிறது.
25ந் தேதி பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கி ஆகஸ்ட் 25 முதல் அக்டோபர் 23ந் தேதி வரை நடைபெறுகிறது. 431 பொறியியல் கல்லூரிகளில் B.E., B.Tech., B.Arch., படிப்புகளில் சேர நாளை முதல் கலந்தாய்வு இடங்கள் ஒதுக்கப்பட்டவர்கள் அடுத்த 7 நாட்களுக்குள் கட்டணம் செலுத்தாவிட்டால், அந்த இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.