தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 13, 2021, 9:45 PM IST

ETV Bharat / state

செருப்பில் கடத்தப்பட்ட தங்கம்... மடக்கிப் பிடித்த சுங்கத்துறையினர்..!

துபாயிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவர், செருப்பில் தங்கம் கடத்தி வந்ததைக் கண்டறிந்த சுங்கத்துறையினர், அதனைப் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

smuggling through chennai airport  gold smuggling in chennai airport  customs officer caught gold smuggler in chennai airport  smuggled gold by slippers  person who smuggled gold by slippers was caught by customs officer  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  தங்கக் கடத்தல்  சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல்  செருப்பில் தங்கம் கடத்தியவர் கைது  சென்னை விமான நிலையத்தில் செருப்பில் தங்கம் கடத்தியவர் கைது
தங்கக் கடத்தல்

சென்னை:பன்னாட்டு விமான நிலையத்திற்கு கொழும்பு மற்றும் துபாயில் இருந்து இரண்டு விமானங்கள் வந்தன.

விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அலுவலர்கள் வழக்கம் போல் கண்காணித்தனர். அப்போது ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தால், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் ரூ. 5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து ஆறு பேர் அணிந்திருந்த செருப்பு சற்று வித்தியாசமாக இருந்ததால் அவற்றை வாங்கி சோதித்தனர். அதில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.40 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள, 928 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். பின்னர் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சாலையில் கிடந்த துப்பாக்கி: காவல் துறை தீவிர விசாரணை

ABOUT THE AUTHOR

...view details