தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜெர்மன், பிரிட்டனிலிருந்து சென்னை வந்தடைந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!

சென்னை: இந்தியாவில் கூடுதலாக தயாரிக்கப்படும் ஆக்ஸிஜனை சேமித்து வைக்க காலி கண்டெய்னா்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் ஜொ்மன், பிரிட்டனிலிருந்து இந்திய விமானப்படையின் தனி விமானத்தில் சென்னை வந்தது.

By

Published : May 4, 2021, 1:01 PM IST

ஜெர்மன், பிரிட்டனிலிருந்து சென்னை வந்தடைந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!
ஜெர்மன், பிரிட்டனிலிருந்து சென்னை வந்தடைந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்!

கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் இந்தியாவில் மோசமான நிலையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் கரோனா தொற்று தாக்கம் அதிகரித்து வருகிறது. வட மாநிலங்களில் கரோனா நோயாளிகள் பலர் ஆக்ஸிஜன் கிடைக்காமல் உயிரிழந்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

எனவே ஆக்ஸிஜன் உற்பத்தியை இந்தியாவில் அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதையடுத்து, தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் மூடப்பட்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையை 3 மாதங்களுக்கு மட்டும் திறந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் கூடுதலாக உற்பத்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆக்ஸிஜனை சேமித்து வைக்க காலி கண்டெய்னா்கள்
இந்நிலையில், இதேபோல் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனை சேமித்து வைக்க கண்டெய்னர்களுக்கும் இந்தியாவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்து கொண்ட வெளிநாடுகள் ஆக்ஸிஜன் சேமித்து வைப்பதற்கான கண்டெய்னா்கள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டா்களை இந்தியாவிற்குக் கொடுத்து உதவ முன்வந்துள்ளது.
ஆக்ஸிஜன் சிலிண்டா்கள்
அதன்படி இந்திய விமானப்படையின் சரக்கு விமானமான சி-17 ரக விமானத்தில் ஜெர்மனியிலிருந்து 4 கிரியோஜெனிக் ஆக்ஸிஜன் கண்டெய்னர்களும், பிரிட்டனில் உள்ள பிரைஸ் நார்டன் நகரிலிருந்து 900 ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் ஏற்றிக்கொண்டு, இந்திய விமானப்படை விமானம் சென்னைக்கு இன்று (மே.4) காலை 5.30 மணிக்கு வந்தது. இவை ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் தட்டுப்பாடு உள்ள பல்வேறு பகுதிகளுக்குப் பிரித்து அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details