சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் காமராஜர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட மண்டலங்களில் தேனாம்பேட்டை முன் உதாரணமாக திகழ்கிறது. மண்டலம் ஒன்பதுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 1987 தெருக்கள் உள்ளன. அதில் 741 தெருக்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை மண்டலத்தில் தொற்று உள்ளவர்கள் 16.5 விழுக்காடு குறைந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தொற்று அதிகமாக காணப்பட்ட தேனாம்பேட்டை மண்டலம் தற்போது அதிலிருந்து மீண்டு முன் உதாரணமாக திகழ்கிறது.