தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 16, 2019, 3:10 PM IST

ETV Bharat / state

‘எப்போதும் மம்மி ஆட்சிதான்’ - பேரவையில் ஜெயக்குமார் சிரிப்பலை!

சென்னை: ஆடிக்காற்றில் அதிமுக ஆட்சி பறந்துவிடும் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கூறியதற்கு, அமைச்சர் ஜெயக்குமார் நகைச்சுவையாக பதலளித்துள்ளார்.

jayakumar

சட்டப்பேரவையில் இன்று மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா, ஆடிக்காற்றில் அம்மிக்கல்லோடு அம்மாவின் ஆட்சியும் பறந்து போய்விடும் என அதிமுகவை கிண்டல் செய்யும் விதமாக பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஆடிக் காற்றும் அடிக்காது, அம்மியும் பறக்காது, அம்மாவின் ஆட்சி எப்போதும் அகலாது என்றார்.

இதையடுத்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘இப்படி நீங்கள் பேசுவீர்கள் என்று தான் அம்மிக்கு பதிலாக ஏற்கனவே மிக்ஸி கொடுத்துவிட்டார்கள். பழைய பழமொழி இப்போது பொருந்தாது. எப்போதும் மம்மி ஆட்சி தான்’ என்றவுடன் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.

ABOUT THE AUTHOR

...view details