சென்னை :தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் ரேணுகா. இவர் கடந்த 9ஆம் தேதி இரவு 9 மணி அளவில் பணிக்குச் சென்றுவிட்டு சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் சென்றுள்ளார். அவருடன் மேலும் இரண்டு பெண்கள் இருந்துள்ளனர்.
அப்போது மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் பெண்கள் செல்லும் பெட்டியில் ஏறி திடீரென பெண்களுக்கு முன்பு ஆபாசமான செயலில் ஈடுபட்டுள்ளார். இதனைக்கண்ட ரேணுகா தனது செல்போனில் வீடியோ எடுத்து அவரை திட்டியுள்ளார். இதனால் அந்த நபர் குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.