தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2021, 12:27 PM IST

Updated : Jun 8, 2021, 2:16 PM IST

ETV Bharat / state

மாணவி கொடுத்த பாலியல் புகார்: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது!

maharisi school teacher arrested in pocso
maharisi school teacher arrested in pocso

12:22 June 08

சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் மீது மாணவி கொடுத்த பாலியல் புகாரின் பேரில் அவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னையில் சமீபகாலமாக ஆசிரியர்கள் மீது பள்ளி மாணவிகள் பாலியல் புகார் அளித்து வருவது அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே மாணவிகள் அளித்த பாலியல் புகாரில் கே.கே நகர் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், பூக்கடை தடகளப் பயிற்சியாளர் நாகராஜன், அண்ணா நகர் கெபிராஜ் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.  

இந்நிலையில், பள்ளி மாணவிகள் அச்சமின்றி புகாரளிப்பதற்காக குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி, தனது செல்போன் எண்ணை வழங்கினார். இந்த செல்போன் எண்ணிற்குப் பல புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.

அந்த வகையில், சேத்துபட்டில் இயங்கிவரும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் ஆசிரியரான ஆனந்த் என்பவரது மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் இணையதளம் மூலம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் திருவொற்றியூரைச் சேர்ந்த ஆசிரியர் ஆனந்தை கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், இதேபோல் வேறு மாணவிகளிடம் பாலியல் தொல்லையில் ஆனந்த் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகருக்கு தர்ம அடி!

Last Updated : Jun 8, 2021, 2:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details