தமிழ்நாடு

tamil nadu

மதுரவாயல் பாலம் அருகே லாரி மீது லாரி மோதி விபத்து!

சென்னை: மதுரவாயல் பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரிக்குள் சிக்கிய ஓட்டுநரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

By

Published : Sep 15, 2020, 3:27 PM IST

Published : Sep 15, 2020, 3:27 PM IST

Updated : Sep 15, 2020, 4:00 PM IST

Accident
Accident

சிவகாசி மாவட்டத்திலிருந்து சரக்குகளுடன் லாரி ஒன்று பொன்னேரி நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் மதுரவாயல் நெடுஞ்சாலை முடிச்சூர் பாலம் அருகே வரும்போது முன்னால் சென்ற லாரிமீது எதிர்பாராதவிதமாக வேகமாக மோதியது.

இதில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கோபி (35) லாரியில் முன் பகுதியில் சிக்கிக் கொண்டார். இந்த விபத்தில் ஓட்டுநர் கோபியின் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால், வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்துள்ளார்.

பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், தாம்பரத்திலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு வீரர்கள் கோபியை சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர்.

பின்னர் மயக்கமடைந்த அவருக்கு முதலுதவி அளித்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கொள்ளிடம் பாலத்தை விரைவில் திறக்க கோரிக்கை!

Last Updated : Sep 15, 2020, 4:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details