தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 3, 2021, 1:19 PM IST

Updated : Aug 3, 2021, 2:22 PM IST

ETV Bharat / state

இபிஎஸ்க்கு அழைப்புவிடுத்தும் வரவில்லை- அமைச்சர் துரைமுருகன்

கருணாநிதியின் உருவப்பட திறப்பு விழாவிற்கு முறைப்படி அழைப்பு விடுத்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Durai Murugan
அமைச்சர் துரைமுருகன்

சென்னை : சட்டப்பேரவையில் இதுவரை 15 தலைவர்களின் உருவப்படங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், 16ஆவது தலைவராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் நேற்று சட்டப்பேரவை மாடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஆக்.3) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "சட்டப்பேரவையில் ஜெயலலிதா படத்திறப்புக்கு எங்களுக்கு வெறும் அழைப்பிதழ் மட்டுமே வந்தது.

ஆனால் கலைஞர் படத்திறப்பு விழாவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துரை வழங்க அவர் பங்கேற்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் துரைமுருகன்

ஆனால் அவர் பங்கேற்கவில்லை. விழாவில், தான் பங்கேற்கவில்லை என்பதை சட்டப்பேரவை செயலாளரிடம் எதிர்கட்சித் தலைவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்” என்றார்.

இதையும் படிங்க: பேரவையில் கருணாநிதியின் உருவப்படம்: குடியரசுத் தலைவர் திறந்துவைப்பு

Last Updated : Aug 3, 2021, 2:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details