தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலிக் குடங்களுடன் ஒன்று திரண்ட பெண்கள்!

காஞ்சிபுரம்: குடிநீருக்காக சாலை மறியலில் ஈடுபட்ட காமாட்சியம்மன் சன்னதி தெருவைச் சேர்ந்த பெண்கள் பேச்சுவார்த்தை நடத்தவந்த அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

By

Published : Jun 25, 2019, 2:52 PM IST

போராட்டம்

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட எட்டாவது வார்டு காமாட்சியம்மன் சன்னதி தெருவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இப்பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்துவருவதால் இது குறித்து நகராட்சி அலுவலகத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என காமாட்சியம்மன் சன்னதி தெரு மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்நிலையில், ஒன்றாக திரண்ட பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பழைய ரயில் நிலையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவ காஞ்சி காவல் துறை, நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நகராட்சி பொறுப்பு ஆணையர் மகேந்திரனை பெண்கள் முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மக்கள் போராட்டம்

இதனைத் தொடர்ந்து குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details