சென்னை:JNU நிர்வாகம் வரலாற்று ஆய்வு மைய நூலகத்தை மூடவும், அங்குள்ள புத்தங்களை வேறு இடத்திற்கு மாற்றவும் திடீரென முடிவு செய்தது. இந்த தகவல், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் அடியாக விழுந்தது. தற்போது இந்த மையம் இந்திய வரலாற்றை ஆய்வு செய்வதற்கான உலகத் தரம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மேலும், நூலகம் அறிஞர்களுக்கு இன்றியமையாத ஒரு வளமாகும்.
இந்த வரலாற்று ஆய்வு மைய நூலகம் கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு ஒருங்கிணைந்ததாக உள்ளது. மேலும், தமிழ்நாடு குறித்த ஆய்வுகளுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. தற்போது இந்த நூலகம் காலி செய்யப்பட்டு, புதிதாக தமிழாய்வு சிறப்பு மையத்திற்கு இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து வரலாற்று ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ சமூகத்தின் எந்த ஆலோசனை இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மேலும், இந்த நடவடிக்கை இந்தியாவில் உள்ள சிறந்த துறை நூலகங்களில் ஒன்றின் அழிவுக்குச் சமமாக அமைந்தது. நூலகத்தினை இடமாற்றம் செய்யப்படும்போது சேகரிப்புகள் சிதறடிக்கப்படும். மேலும், அவைகளை தவறான இடத்தில் வைக்கும் நிலை வரும். தீவிர ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் இதை நன்கு அறிவர். ஆகையால் வரலாற்று ஆய்வு மைய நூகலத்தை காப்பாற்ற வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆனால், பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு மையம் இடம் பெறுவதற்கு வரலாற்று மையம் அனுமதிக்கவில்லை என்று காட்டுவதற்கு முயற்சித்து வருகின்றனர். இத்தகைய குற்றச்சாட்டிற்கு மாறாக உலகளவில் அறியப்படும் வரலாற்று ஆய்வு மையம், தமிழ் மற்றும் தென்னிந்திய ஆய்வுகளின் முன்னோடியாகும். மேலும், ஆரம்பம் முதலே முக்கிய வரலாற்றாசிரியர்களான ஆர்.சம்பகலட்சுமி, பேராசிரியர் கே.மீனாட்சி, பேராசிரியர் விஜய ராமசுவாமி, பேராசிரியர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன் கடந்த காலத்தில் தமிழ் வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளனர்.
பேராசிரியர் ஆர்.மகாலட்சுமி, பேராசிரியர் ரஞ்சீதா தத்தா மற்றும் பேராசிரியர் எஸ்.குணசேகரன் ஆகியோரின் தமிழ் மற்றும் தென்னிந்திய ஆய்வுகளுக்கான மிக முக்கியமான மையமாக உள்ளது. கடந்த காலங்களில், ராஜன் குருக்கள் போன்ற அறிஞர்கள் இங்கு கற்பித்துள்ளனர். மேலும் நன்கு அறியப்பட்ட கல்வெட்டு மற்றும் வரலாற்றாசிரியர் பேராசிரியர் ஆர்.நாகசாமியும் இங்கு வருகை தரும் அறிஞராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மாணவர்களில், டாக்டர் சுமதி ராமசுவாமி மற்றும் டாக்டர் மீரா ஆபிரகாம் ஆகியோரின் படைப்புகள் கல்வியாளர்களுக்கு நன்கு தெரிந்தவை. 1980களின் பிற்பகுதியில், வரலாற்று ஆய்வு மையத்தின் முன்னாள் ஆசிரியர்கள் சிறப்பு மையமாக அறிவிக்க வேண்டும் என்று வலுவாக வைக்கப்பட்ட கோரிக்கையால்தான் நூலகம் வந்தது. தற்போது இந்த மையம் ஆசிரியர்களின் வெளியீடுகள் மற்றும் மாணவர்களால் செய்யப்பட்ட ஆய்வுகள் மதிப்பீடு செய்யப்பட்டு, பல்கலைக்கழகத்தின் மானியக்குழு நிதியை வரலாற்று ஆய்வு மையத்திற்கு வழங்கியது.
உலகெங்கிலும் உள்ள பல்வேறு காப்பகங்கள் மற்றும் களஞ்சியங்களில் இருந்து ஆசிரியர்களும் மற்ற மூத்த அறிஞர்களும் கொண்டு வந்து வைத்துள்ள மிக முக்கியமான முதன்மை ஆவணங்கள், இரண்டாம் நிலை புத்தகங்கள் மற்றும் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களின் நகல்களைக் கொண்ட நூலகத்தை மேம்படுத்துவதற்கு மையத்தின் ஆசிரியர்கள் பெரும் முயற்சி எடுத்துள்ளனர்.