சென்னை:கன்னியாகுமரி மாவட்டம், பெரியவிளை கோட்டரம் பகுதியை சேர்ந்தவர் சுமித்ரா தங்க ஜோதி. இவர் கன்னியாகுமரி மகாராஜபுரம் என்ற ஊரில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது இன்னோவா காரை சென்னை கே.கே நகரில் உள்ள பிரபல டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு விடுவதற்காக தனது குடும்பத்தோடு சென்னை வந்த சுமித்ரா ரெட் ஹில்ஸில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி உள்ளார்.
அதன் பின்னர் கடந்த 12 ஆம் தேதி மெரினா குடும்பத்துடன் மெரினா கடற்கரைக்கு வந்து உள்ளார். மாலை 4 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்த அவர், கார் பார்க்கிங்யில் காரை விட்டுள்ளார். அப்போது கார் பார்க்கிங்க்கு டோக்கன் கொடுக்கும் மாநகராட்சி ஊழியர், காருக்கு ரூபாய் 50 டோக்கன் கொடுத்து உள்ளார். டோக்கனை பெற்றுக் கொண்ட சுமித்ரா தங்க ஜோதி தனது குடும்பத்தினருடன் கடற்கரையை நோக்கி பயணித்து உள்ளார்.
அப்பொழுது டோக்கன் கொடுத்த மாநகராட்சி ஊழியர் கார் தவறான இடத்தில் பார்க் செய்யப்பட்டு உள்ளதாகவும், கார் சாவியை கொடுத்தால் சரியான இடத்தில் பார்க் செய்து விட்டு தானே கொண்டு வந்து அவரிடம் கொடுத்து விடுவதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பிய சுமித்ரா தங்க ஜோதி கார் சாவியை கொடுத்து உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் மாநகராட்சி ஊழியர் கார் சாவியை மீண்டும் கொண்டு வந்து கொடுக்கவில்லை.