ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் மாவட்டம், காட்டூர் கிராமத்தில் அமையவுள்ள கருணாநிதி மணிமண்டபத்திற்காக எனது ஒரு மாத சம்பளத்தை கொடுப்பதற்காக வந்தேன். அப்போது தொகுதியில் மக்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்களை ஸ்டாலினிடம் தெரிவித்தேன்.
அரசியலில் வெற்றிடமே கிடையாது- பாரிவேந்தர் எம்.பி
சென்னை: அரசியலில் வெற்றிடமே கிடையாது என ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர் எம்.பி தெரிவித்துள்ளார்.
IJK president Paarivendhar
என்னை பொருத்தவரை உள்ளாட்சி தேர்தல் வருமா, வராதா என்ற சந்தேகம் உள்ளது. தொகுதிகள் சரியாக வரையறுக்கப்படவில்லை, எனவே வராது என்பதுதான் என்னுடைய கருத்து என்றார்.
இதையும் படிங்க: ‘ரஜினியின் கருத்தை வழிமொழிவதைத் தவிர வேறு வழியில்லை’ - கமல் ஹாசன்