சென்னை: மாலை முரசு நிறுவனர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 88ஆவது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், "ஆளுநர் ஆர்.என்.ரவியை நியமித்தது யார் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் தானே?. அப்பொழுது அது சார்ந்து நிகழ்வுகளும் அதை சார்ந்த தலைவர்களும் தானே அவர் சந்திப்பார்.
தமிழ் மீதும், தமிழ் இனத்தின் மீதும் பற்றுக்கொண்டு பணியாற்றியவர் ராமச்சந்திரன் ஆதித்தனார். இரண்டு முறை அவரை இல்லத்தில் சந்தித்து இருகிறேன். எளிமையானவர். ஈழப்போர் தடுப்பதற்கு தொடர்பான செய்திகளை வெளியிட அனைவரும் தயங்கிய போது, இவர் செய்திகளை வெளியிட்டு பிறந்த இனத்திற்கு கடமையை செய்து பணியாற்றினார். அரசியல் என்பது ஒரு வாழ்வியல், அனைத்து இடங்களிலும் அரசியல் பேச வேண்டும் என எப்பொழுது சொல்கிறார்கள் அப்பொழுதுதான் நாடு உருப்படும்.
ஆளுநரை சந்தித்து அரசியல் பேசுவதில் தவறில்லை யார் வேண்டுமானாலும் ஆளுநரை சந்தித்து அரசியல் பேசலாம் என கூறினார். அரசியல் பேசாதவன் மனிதராக இருக்க முடியாது என்கிறார் காந்தி, மனிதனின் உரிமைக்காக பேசும் அனைத்தும் அரசியல் தான். அந்த உரிமை ரஜினிகாந்திற்கு இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ஆளுநரை நியமித்துள்ளார்கள். பிறகு ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாதா.