தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 17, 2022, 3:59 PM IST

ETV Bharat / state

சிசிடிவி:பொன்னியின் செல்வன் பார்க்கச் சென்ற போது வீட்டில் கொள்ளை !

ஆவடி அருகே தனியார் வங்கி மேலாளர் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் தங்க நகையை 6 பேர் கொண்ட கும்பல் கொள்ளை அடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சிசிடிவி:பொன்னியின் செல்வன் பார்க்கச் சென்ற போது வீட்டில் கொள்ளை நிகழ்ந்த சம்பவம்!
சிசிடிவி:பொன்னியின் செல்வன் பார்க்கச் சென்ற போது வீட்டில் கொள்ளை நிகழ்ந்த சம்பவம்!

சென்னை:ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் அம்மன் அவென்யூ ஐயப்பன் நகரை சேர்ந்தவர் அனிடாஸ்38. இவர் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் மேலராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு குடும்பத்துடன் செங்குன்றம் பகுதியில் உள்ள திரையரங்கத்திற்கு சென்று பொன்னியின் செல்வன் திரைப்படம் இரவு காட்சி படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு இரவு இரண்டு மணி அளவில் வந்துள்ளனர்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 33 சவரன் தங்க நகை திருட்டு போனது தெரியவந்தது. உடனடியாக திருமுல்லைவாயில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்து வந்த திருமுல்லைவாயில் காவல்துறையினர் அவர் வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஆறு பேர் கொண்ட கும்பல் இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.

சிசிடிவி:பொன்னியின் செல்வன் பார்க்கச் சென்ற போது வீட்டில் கொள்ளை நிகழ்ந்த சம்பவம்!

இந்த சிசிடிவி காட்சி வைத்து கொள்ளை அடித்து சென்ற 6 மர்ம நபர்களை திருமுல்லைவாயில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அதே போல மகிழ்ச்சியாக பொன்னியின் செல்வன் சினிமா பார்த்துவிட்டு வந்த குடும்பத்தினர் நகைகள் திருடு போனதால் சோகத்தில் மூழ்கினர்.

இதையும் படிங்க:ஆபாச வீடியோ காசியின் வெளிநாட்டு கூட்டாளி கைது.. குவைத்திலிருந்து திரும்பியதும் பிடித்த போலீசார்...

ABOUT THE AUTHOR

...view details