நீர்நிலைகளில் கழிவுநீர், குப்பையை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். கழிவுநீர் அனைத்தையும் சுத்திகரித்த பிறகே நீர்நிலைகளில் கலக்க விடவேண்டும். ஏரி, குளங்களை ஆழப்படுத்தி அதன் சேமிப்பு கொள்ளளவை பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும்.தண்ணீர் பற்றாக்குறை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் உண்ணாவிரதம் நடத்த திட்டமிட்டுள்ளது.
‘கேளு சென்னை கேளு’ என்ற தலைப்பில் ஜூன் 30 ஞாயிற்றுகிழமை உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி கேட்டு சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கொடுக்கப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.காவல்துறை ஆணையரின் இந்த உத்தரவை ரத்து செய்து உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.