தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 1, 2021, 7:00 AM IST

ETV Bharat / state

பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர்: ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு!

சென்னை: பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, வரும் ஜுன் 3ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

உயர் நீதிமன்றம் சென்னை
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை கே.கே.நகரில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் 11, 12ஆம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசியராக பணியாற்றியவர், ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் ராஜகோபாலன் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் நேற்று(மே 31) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதேபோல் காவல் துறையினரும் ஒருபுறம் ராஜகோபாலை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி மனு தாக்கல் செய்தனர். இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி முகமது ஃபரூக் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஜாமீன் மனு குறித்து காவல் துறையினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் ஜுன் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதேபோல் ராஜகோபாலனை காவல் துறை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனுவை இன்றைக்கு (ஜூன் 01) தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details