சென்னை:கிண்டியில் உள்ள பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு அலுவலகத்தில், ராணிப்பேட்டை மாவட்டம் குருவராஜ பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புகார் ஒன்றை அளித்தனர்.
அந்தப் புகாரில், "ரபோல் என்ற நிதி நிறுவனத்தினர் 7000 ரூபாய் கட்டினால் மாதம் 1 மூட்டை அரிசி வீதம் 12 மாதங்கள் வழங்குவதாக தெரிவித்து பணம் வாங்கிக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து 30 ஆயிரம் ரூபாய் முதல் தவணையாகச் செலுத்தினால் 52 வாரங்களுக்கு 2,500 ரூபாய் வழங்குவதாகவும் தெரிவித்து பணம் பெற்றுக்கொண்டனர்.