தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 17, 2020, 10:42 PM IST

ETV Bharat / state

திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி - தமிழ்நாடு அரசு உத்தரவு

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திரைப்பட தொழிலாளர்களுக்குத் தமிழ் நாடு அரசு ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்குகிறது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு

கரோனா வைரஸ் தொற்றுப் பரவுவதைத் தடுக்க, கடந்த மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திரைப்பட தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்த 9 ஆயிரத்து 882 பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இதற்காக, 98 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. ஏற்கனவே இதற்கு முன்பு தமிழ்நாடு அரசு திரைப்பட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details