சென்னை:தாய்லாந்து நாட்டுத் தலைநகர் பாங்காக்கில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலையத்தின் சுங்க அலுவலர்கள் சோதனையிட்டனா். அப்போது திண்டுக்கல்லைச்சேர்ந்த விவேக் (28) என்ற பயணி பெரிய பிளாஸ்டிக் கூடையினை எடுத்து வந்தாா். அவர் வழக்கத்துக்கு மாறாக மிகுந்த பதற்றத்துடனும், பரபரப்புடனும் காணப்பட்டார்.
இதை அடுத்து சுங்க அலுவலர்களுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினார். இதனால் அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் கூடையை அலுவலர்கள் திறந்து பாா்த்து, அதிர்ச்சி அடைந்தனா். அதற்குள் வெளிநாட்டில் உள்ள மலைப்பாம்பின் 5 குட்டிகள் வைத்திருந்ததைக் கண்டுபிடித்தனா்.
இதனால் விவேக்கை வெளியில் விடாமல் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னையில் உள்ள மத்திய வன காப்பக குற்றப்பிரிவு அலுவலர்களுக்குத் தகவல் கொடுத்தனர். அந்த அலுவலர்கள் உடனடியாக விரைந்து வந்து, இந்த மலைப்பாம்பு குட்டிகளை ஆய்வு செய்தனர்.