சென்னை:சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திருமால் வளவன்(48). இவரது மகன் பிரகதீஷ்வரன் கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த நபர்களுடன் ஏற்பட்ட மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் திருமால் வளவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 7) வீட்டில் யாரும் இல்லாதபோது திருமால் வளவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெ.ஜெ. நகர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.