தமிழ்நாடு

tamil nadu

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

சென்னையில் மகன் இறந்த துக்கத்தில் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

By

Published : Aug 8, 2021, 3:19 PM IST

Published : Aug 8, 2021, 3:19 PM IST

Updated : Aug 8, 2021, 3:52 PM IST

மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை
மகன் இறந்த துக்கத்தில் தந்தை தற்கொலை

சென்னை:சென்னை அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திருமால் வளவன்(48). இவரது மகன் பிரகதீஷ்வரன் கடந்த ஜனவரி மாதம் அதே பகுதியைச் சேர்ந்த நபர்களுடன் ஏற்பட்ட மோதலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாமல் திருமால் வளவன் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று(ஆகஸ்ட் 7) வீட்டில் யாரும் இல்லாதபோது திருமால் வளவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெ.ஜெ. நகர் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எண்ணம் உங்களுக்கு மேலோங்கினால், அதிலிருந்து வெளிவரவும், புதியதொரு வாழ்க்கையினை தொடங்கிடவும், உங்களுக்கான ஆலோசனைகளை எந்த நேரத்திலும் வழங்கிட அரசும், சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் காத்திருக்கின்றன.

உதவிக்கு அழையுங்கள்:

அரசு உதவி மையம் எண் - 104, சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம் - +91 44 2464 0050, +91 44 2464 0060

இதையும் படிங்க:மின்சாரம் தாக்கி அம்மா, மகள்கள் பலி!

Last Updated : Aug 8, 2021, 3:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details