சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எத்தியோப்பியாவிலிருந்து சென்னை வந்த விமானத்தின் பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அதில் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்த கொய்டேம் அரிகே வோல்டி மைக்கேல் (35) என்பவரைச் சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் சுற்றுலா விசாவில் சென்னை வந்ததாகக் கூறினார். அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.