தமிழ்நாடு

tamil nadu

‘இனி திருநங்கைகளும் திமுக உறுப்பினர் ஆகலாம்’ - பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

சென்னை: திருநங்கைகளை கட்சியில் உறுப்பினராகச் சேர்க்க திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

By

Published : Nov 10, 2019, 8:51 PM IST

Published : Nov 10, 2019, 8:51 PM IST

dmk general body meeting

திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.யே மைதனாத்தில் இன்று நடைபெற்றது. இந்த பொதுக்கூழுக் கூட்டத்தில் திமுக விதிகளில் சில சட்டதிருத்தங்கள் செய்யப்பட்டு தீர்மானங்கள் இயற்றப்பட்டன. மேலும், 21 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீக்கும் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் மறைவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்குழுவில், திருநங்கைகளை கட்சியில் உறுப்பினர்களாக இணையத்தின் வழியாக சேர்க்கத் தீர்மானம் இயற்றப்பட்டது. திமுக இளைஞர் அணியில் இருக்க வயது வரம்பு 18 முதல் 35ஆக மாற்றி திருத்தம் செய்யப்பட்டது.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை திமுகவில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைப்பு வைத்துக்கொள்ளலாம் என்றும், பிற மாநிலங்களில் உறுப்பினர்களைச் சேர்த்து தமிழ்நாட்டைப்போல் அங்கும் செயற்குழு, அமைத்துக்கொள்ளலாம் எனவும் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ‘அகில இந்திய பிரச்னையில் ஒரு குறிப்பிட்ட மாநிலம் மட்டும் போராடுவது வேதனை’ - டி.கே. ரங்கராஜன்

ABOUT THE AUTHOR

...view details