தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணயத்திற்குப் பதிவாளராக உயர் நீதிமன்ற உதவி பதிவாளர் அல்லது சார்பு நீதிபதியை நியமிக்க விதிகள் வகுக்கப்பட்டன. இந்நிலையில் மாநில நுகர்வோர் குறைதீர் ஆணைய பதிவாளராக, மாவட்ட நீதிபதியை நியமிக்கும் வகையில் 2015ஆம் தேதி விதியில் திருத்தம் கொண்டுவரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கலந்தாலோசிக்காமல், பதிவாளர் நியமன விதிகளில் திருத்தம் கொண்டுவந்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி, மாவட்ட நுகர்வோர் குறைதீர் மையத்தின் முன்னாள் தலைவர் சுப்புராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், நிர்வாக பணியான பதிவாளர் பணிக்கு, மாவட்ட நீதிபதியாக பணியாற்றுபவரை நியமிக்க அவசியமில்லை என்பதால், 2015ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடைவிதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.