செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் வாக்காளர் கையெழுத்து இயக்கம் நடந்தது. அதில், ’’நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் உள்பட பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர்.