தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 6, 2021, 2:26 PM IST

ETV Bharat / state

வாக்காளர் கையெழுத்து இயக்கம்: தொடங்கிவைத்த செங்கல்பட்டு ஆட்சியர்

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் வாக்காளர் கையெழுத்து இயக்கம் நடந்தது.

வாக்காளர் கையெழுத்து
வாக்காளர் கையெழுத்து

செங்கல்பட்டு அடுத்த சிங்கப்பெருமாள் கோயிலில் வாக்காளர் கையெழுத்து இயக்கம் நடந்தது. அதில், ’’நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான, நியாயமான, அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம்.

ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும் மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றி வாக்களிப்போம் என்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் உள்பட பொதுமக்கள் உறுதிமொழியேற்றனர்.

இதில் மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார். மேலும், மகளிர் திட்ட அலுவலர் ஸ்ரீதர், உதவித் திட்ட அலுவலர் வீரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊராட்சிச் செயலாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனையும் படிங்க: நள்ளிரவில் வெளியான தொகுதி பங்கீட்டு உடன்படிக்கை - பின்னணி என்ன?

ABOUT THE AUTHOR

...view details