தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 4, 2020, 3:40 PM IST

ETV Bharat / state

தொலைதூர கல்வியில் சட்டப்படிப்பு: பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

சென்னை: தொலைதூரக் கல்வி மூலம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சட்டப்படிப்புகள் வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high
high

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல்செய்துள்ளார்.

அதில், "அண்ணாமலை பல்கலைக்கழகம் தொலைதூரக் கல்வி மூலம் மூன்று ஆண்டு, இரண்டு ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது.

இந்திய பார் கவுன்சில் அங்கீகாரம் இல்லாமல் சட்டப்படிப்புகளை தொலைதூரக் கல்வி மூலம் நடத்துவது தொடர்பான விளம்பரத்தை ரத்துசெய்து தடைவிதிக்க வேண்டும். இதற்கு முன் இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு வழங்கப்பட்ட பட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2008ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டக் கல்வி விதிகளின்படி, தொலைதூரக் கல்வி மூலம் சட்டப்படிப்புகளை முடித்தவர்கள், வழக்கறிஞர்களாகப் பதிவுசெய்ய முடியாது என்றும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, மனு தொடர்பாக இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும், அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details