சென்னை:தாம்பரம் அடுத்த சிட்லபாக்கத்தில் ஐந்து தளங்கள் கொண்ட புதிய கட்டடம், தமிழ்நாடு சமூக நலவாழ்வு துறையின் கீழ் வேலை செய்யும் பெண்களுக்கான அரசு விடுதி சுமார் 22 கோடி திட்ட மதிப்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை நேற்று(ஆக.21) தலைமை செயலாளர் இறையன்பு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை துரிதப்படுத்தவும் அறிவுறுத்தினார். மேலும் யாரும் எதிர்பார்க்காத வகையில் சமூக நலத் துறை சார்பில் அரசு சேவை இல்லத்தில் தங்கி இருந்த 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுக்கு எங்கிருந்து உணவு வருகிறது என அலுவலர்களிடம் கேட்டறிந்த தலைமைச் செயலாளர் இறையன்பு, உடனே உணவு தயாரிக்கும் இடத்திற்குச் சென்று சமையல் செய்பவர்களிடம் சமையல் குறித்து கேட்டறிந்து அதன் தரத்தையும் உறுதி செய்தார்.