சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, "எரிபொருள் விலை உயர்வுக்கு எண்ணெய் நிறுவனங்களே காரணம் என்றாலும், விலைவாசி உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'சாதி கட்டமைப்பை வலுவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது'
சாதி கட்டமைப்பை வலுவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
சாதி கட்டமைப்பை வலுவாக்கி ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் சூழ்ச்சி தமிழ்நாட்டில் எடுபடாது. மாநில உரிமைகளை ஆளும் பழனிசாமி அரசு விட்டுக்கொடுத்து பிரதமர் மோடிக்கும், பாஜகவிற்கும் அடிபணிந்து செல்கிறது. தமிழ்நாடு மக்கள் பழனிசாமி அரசை தோற்கடிக்க தயாராகி விட்டார்கள்.
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தைப் பெற கீழ்த்தரமான அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. ஔவையார், திருவள்ளுவரை நினைவுகூருவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் அவர்கள் காட்டிய வழியில் பயணிக்க பாஜக தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.