தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 13, 2020, 6:11 PM IST

Updated : Nov 13, 2020, 7:52 PM IST

ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு கரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு கரோனா தொற்று உறுதி

18:03 November 13

தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 13) 1,939 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "தமிழ்நாட்டில் இன்று 1,939 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவில் இருந்து 2,572 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 17,748ஆக குறைந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 14 பேர் உயிரிழந்தனர்.  

எனவே கரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,454ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கரோனாவால் இதுவரை 3,758 பேர் உயிரிழந்தனர். சென்னையில் கரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 2,07,173லிருந்து 2,07,686ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 26ஆவது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் இன்று 512 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 72,629 பேருக்கும், இதுவரை 1,06,58,89 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7,52,521லிருந்து 7,54,460ஆக உயர்ந்துள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் இன்று 179 பேருக்கு கரோனா தொற்று

Last Updated : Nov 13, 2020, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details