தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக சென்னை, ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திருவிக நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றானது ஜூலை 7ஆம் தேதி 70 ஆயிரத்தை கடந்திருந்த நிலையில், தற்போது 76 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது தினமும் அதிகரித்து கொண்டே இருந்தாலும், குணமடைந்தோரின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. இதுவரை 56 ஆயிரத்து 947 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டல வாரியான பட்டியலாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி,
ராயபுரம் | 9517 |
தண்டையார்பேட்டை | 8144 |
தேனாம்பேட்டை | 8465 |
கோடம்பாக்கம் | 8491 |
அண்ணா நகர் | 8502 |
திருவிக நகர் | 6078 |
அடையாறு | 4827 |
வளசரவாக்கம் | 3773 |
அம்பத்தூர் | 3647 |
திருவெற்றியூர் | 2927 |
மாதவரம் | 2422 |
ஆலந்தூர் | 2073 |
பெருங்குடி | 1979 |
சோளிங்கநல்லூர் | 1650 |
மணலி | 1383 |