சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சசிக்குமார் (26), கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இருசக்கர வாகனம் திருடுபோனது குறித்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்திவந்த நிலையில், சசிக்குமாரிடம் திருவல்லிக்கேணி காவல் நிலைய காவலர் என அறிமுகம் செய்துகொண்ட மணி என்பவர் வாகனம் திருடுபோனது குறித்து கேட்டுள்ளார்.
இதற்கிடையில், திருடுபோன வாகனம் சசிக்குமாருக்கு கிடைக்க, இந்தத் தகவலை மணி என்பவரிடம் கூறியுள்ளார். மேலும், தான் பதிவு செய்திருந்த முதல் தகவல் அறிக்கையை என்ன செய்வது என்றும் கேட்டுள்ளார்.
தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை தான் ரத்து செய்துவிடுவதாகவும், அதற்கு 15 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும் கூறிய மணி, முன்பணமாக சசிக்குமாரிடம் ஆறாயிரம் ரூபாயைப் பெற்றுள்ளார். ஓரிரு தினங்களில் சசிக்குமாரை மீண்டும் தொடர்புகொண்டு மீதிப்பணத்தை தருமாறு அவர் வற்புறுத்தியுள்ளார்.