சென்னை: வேப்பேரியில் உள்ள சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ,அக்கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம், நடிகர் நாகர்ஜுனா நடித்த ‘வைல்டு டாக்’ படத்தை தடை செய்யக்கோரி புகார் அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கடந்த ஏப்ரல் மாதம் OTTஇல் வெளியான ‘வைல்டு டாக்’ திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போன்று சித்தரிக்கும் பல்வேறு காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக, பள்ளிவாசல் மதரசா போன்ற இடங்களில் தீவிரவாத கும்பலுக்கு அடைக்கலம் கொடுப்பது போன்ற காட்சிகளும், இஸ்லாமிய இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.