தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 12, 2021, 7:01 PM IST

ETV Bharat / state

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவு

திருப்பூர் மாவட்டம், கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

cm ordered to open amarvathi dam for farmers
cm ordered to open amarvathi dam for farmers

சென்னை: வேளாண் மக்களிடமிருந்து கோரிக்கை வந்ததை தொடர்ந்து, பாசன வசதிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருப்பூர் மாவட்டம், கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

அம்மக்களின் வேண்டுகோள்களை ஏற்று, திருப்பூர் மாவட்டம் கல்லாபுரம் மற்றும் இராமகுளம் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளின் இரண்டாம் போக பாசனத்திற்காக 15.1.2021 முதல் 30.4.2021 வரை 260 மி.க. அடிக்கு மிகாமல் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2,834 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details