சென்னை:இன்று(26/11/2021) 'பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள்' அதை விழிப்புணர்வு மூட்டும் வகையில் முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் கணொலி செய்தி ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் கூறியது கீழே வருமாறு:
"சமீபத்தில் நடந்த பெண்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது...!":
சமீபத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகளை காணொலியில் அவர் குறிப்பிட்டுப் பேசுகையில், 'பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொள்வதுமான செய்தியைக் கேள்விப்படும்போது உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அவமானமாக இருக்கிறது'
'விட்றாதீங்கப்பா என்று அந்தக் குழந்தைகள் கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது..!':
அறமும், பண்பும் அதிகம் பேசப்படும் சமூகத்தில் கல்வியிலும், வேலை வாய்ப்பும் முன்னேறிய ஒரு நாட்டில், அறிவியலும்,தொழில் நுட்பமும் வளர்ந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான சம்பவங்களும் நடப்பது வெட்கித்தலைகுனிய செய்கிறது.
இதைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. இருக்கவும் கூடாது. அந்தப் பிஞ்சு குழந்தைகள் 'விட்றாதீங்கப்பா என்று கதறுவது என் மனதிற்குள் ஒலிக்கிறது..!' என்று தன் மன வேதனையை காணொலியில் பதிவு செய்தார்.
'பல சம்பவங்கள் மறைக்கப்படுகின்றன':
'பெண்கள் பள்ளியில், கல்லூரிகளில், அலுவலகத்தில், பொதுவெளியில் எனப் பல்வேறு இடங்களில் வன்முறைகளுக்கும், பாலியல் தொல்லைகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
ஆனால், அதில் சில சம்பவங்கள் தான் வெளிவருகிறது. மற்றவை மறைக்கப்படுகின்றன’ என்று கூறினார்.
'மனசாட்சி அற்ற மனிதர்களின் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாகவேண்டும்...!':
இப்படிப்பட்ட செயல்களை செய்பவர்கள் மனசாட்சியற்றவர்கள் என்பதை கலைஞர் எழுதிய வரிகளை வைத்து மேற்கோடிட்டு காட்டினார்.
'மனசாட்சி உறங்கும் சமயம் பார்த்துத்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது', என்று கலைஞர் அறை நூற்றாண்டிற்கு முன்னர் ஒரு திரைப்படத்தில் எழுதியிருந்தார். அவ்வாறு இருக்கையில், பெண்களுக்கு எதிரான வன்முறைச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை நாம் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பற்றிப் பேசி ஒரு பொருளும் இல்லை.
பெண்களும்,குழந்தைகளும் புகார் தர முன்வரவேண்டும்:
'பெண்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டலுக்கு எதிராக நிறையச் சட்டங்கள் உள்ளன. அதில் அவர்கள் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என நான் இந்த நேரத்தில் உறுதி அளிக்கிறேன். பெண்கள் அனைவரும் அவர்களுக்கு எதிரானப் பாலியல் வன்முறைகளைப்பற்றி வெளிப்படையாகப் புகார் தர முன்வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
வெளிக்கொண்டு வருவதில் எந்த தயக்கமும் அவசியமில்லை:
'எல்லோரும் புகார்கள் மேல் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டுகின்றீர்கள். பள்ளியின் பெயர் கெட்டுவிடுமோ, கல்லூரியின் பெயர் கெட்டுவிடுமோ, நிர்வாகத்திற்கு பங்கம் ஏற்படுமோ என்று தயக்கம் கொள்ள அவசியம் இல்லை. அப்படி செய்வது உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகி விடும்'என்று,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
உளவியலையும் பாதிக்கிறது:
'பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாகும் பெண்கள், உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். தூக்கமின்றிப் போகிறார்கள்.
பெரும் அச்சத்திற்கு உள்ளாகிறர்கள். இறுதியில் அவர்களின் எதிர்காலமே சிதைந்து விடுகிறது.
இப்படிப்பட்ட சரிவுகளில் இருந்து பெண் குழந்தைகளை காக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது'என்று முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
'குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இந்த அரசு தயங்காது...!':
'பாலியல் தொல்லைகள் குறித்தப் புகார்களுக்கு அரசு உடனே நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதை,மற்ற அனைத்துப் பிரச்னைகளை விட முக்கியமான ஒன்றாக தமிழ்நாடு அரசு கருதுகிறது.
அதை நீங்களே தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். ஆகையால் உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்காது'என்றார் முதலமைச்சர்,மு.க.ஸ்டாலின்.
மேலும்,பெண்களுக்கும்,பெண் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைத் தடுக்க வகுத்த திட்டங்களையும், தீர்வுக்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டார். அவை கீழே வருமாறு: