சென்னை:பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவர்களை சென்னை சுற்றுவட்டாரப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்களாகப் பயன்படுத்தி, அவர்கள் மூலம் பால் விற்பனை செய்யப்படுவதாக தொழிலாளர் நலத் துறை, சைல்டு லைன் அமைப்புக்கு பொதுமக்கள் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் சென்னை திருவொற்றியூர் மாட்டு மந்தை அருகே உள்ள கோமாதா நகர் பகுதியில் தொழிலாளர் நலத் துறை கூடுதல் ஆணையர் உமாதேவி, இணை ஆணையர்கள் மகாதேவன் வேல்முருகன், வருவாய்த் துறையினர், திருவொற்றியூர் காவல் துறையினர் அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளை ஆய்வுசெய்தனர்.